முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அண்மை காலங்களாக மிக குறைவான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தற்பொழுது பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அது போல சீனாவிலும் சைனோபார்ம் எனும் தடுப்பூசி ஒப்புதல் பெற்று பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும் தற்பொழுது அதிகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் மட்டுமே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பலரும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் உள்ள சைனோவேக் எனும் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட கொரோனாவேக் எனும் தடுப்பூசி மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தும் படி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் யின் வெயிடாங் கூறியுள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசியை இரண்டு கட்டங்களாக 3 முதல் 17 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களிடம் சோதனை செய்ததாகவும், இந்த சோதனையில் இது நம்பகமானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது எனவும் அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருந்த உலக சுகாதார அமைப்பு, இந்த சைனோவேக் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனாவேக் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…