“கொரோனா இன்னும் ஓயவில்லை”.. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

Published by
Surya

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்துக்கொண்டே வருகின்றனர். இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஒரு மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர், உலகளவில் கொரோனா பரவல் இன்னும் ஓயவில்லை எனவும், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தாத நாடுகள், பொதுமுடக்கத்தை தொடரவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர், உலக நாடுகள் பொதுமுடக்கத்தை ரத்து செய்வதில் தீவிரமாக இருந்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் உயிரை காப்பது குறித்து தீவிரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகள், பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டே வருகிறது.

அந்தவகையில் இந்தியா, கடந்த சனிக்கிழமை நான்காம் கட்ட தளர்வுகளுடனான பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. அதில், கூடுதலாக சில தளர்வுகளை அமல்படுத்தியது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று மட்டும் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago