டிரம்பின் சர்ச்சை கருத்தை நீக்காத பேஸ்புக் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பேஸ்புக் நிறுவனம், இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. இதனை கண்டித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இந்த பதிவு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பதிவு, ட்விட்டர் வரைமுறைக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியது. ஆனால், பேஸ்புக் அதனை நீக்கவில்லை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அதிருப்தி அடைந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேஸ்புக் “டிரம்பின் கருத்து அரசியல் அறிவிப்பாக பார்க்கப்பட்டதாகவும், அதனால்தான் அதனை நீக்கவில்லை” என விளக்கமளித்துள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…