துருக்கியில் காட்டுத்தீ – 8 பேர் உயிரிழப்பு ; 864 பேர் படுகாயம்…!

Published by
Rebekal

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 864 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

துருக்கியில் உள்ள மத்திய தரை கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீயில் பலர் சிக்கிய நிலையில், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த துருக்கி நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி அவர்கள் கூறுகையில், மானவ்காட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஏழு பேர், மர்மரிஸ் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் மானவ்காட் பகுதியில் 507 பேர், மெர்சின் பகுதியில் 154 பேர் மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் 203 பேர் என மொத்தம் 864 பேர் இந்த காட்டுத் தீயில் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மர்மரிஸ் பகுதியை சேர்ந்த 154 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மானவ்காட், மெர்சின், போட்ரம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

11 minutes ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

35 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

2 hours ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago