செப்டம்பர் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதியா? – விப்ரோ தலைமை அலுவலர் …!

Published by
Edison

செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் (ஹெச்.ஆர்) சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14 ம் தேதி நிறுவனத்தின் 75 வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில்,”இந்தியாவில் 55 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது”, என்று கூறினார். இருப்பினும், அவை முதல் அல்லது இரண்டாவது டோஸ் அளவு தடுப்பூசியா? என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில்,டி.சி.எஸ் நிறுவனத்தின் கடந்த வார நிலவரப்படி, அதன்  ஊழியர்களில் 70% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதத்திற்குள் அதன் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று தெரிவித்தது.

ஆனால்,இன்ஃபோசிஸ் ஊழியர்களில் 59% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து,இன்போசிஸின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ்,பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறுகையில்: “1,20,000 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக மொத்தமுள்ள 2,30,000 டோஸ் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் 59% பேர் குறைந்தது முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,ஊழியர்களில் 10% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்”,என்று தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!

ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…

3 minutes ago

ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!

சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…

1 hour ago

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.., த.வெ.க கல்வி விருது விழா.!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து…

1 hour ago

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.!

வாஷிங்டன்: டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி வரிகளை விதித்ததாக அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவற்றை உடனடியாகத் தடை செய்ய…

2 hours ago

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!

சென்னை : மேற்கு வங்கம் - வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று…

2 hours ago

“கப் தான் டார்கெட்”…பஞ்சாப்பை நொறுக்கி ஃபைனலுக்கு முன்னேறிய பெங்களூர்!

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

11 hours ago