BREAKING: இந்தியாவிற்கு ரூ.7,546 கோடி நிதி அறிவித்த உலக வங்கி.!

Default Image

இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  தற்போது அமலில் உள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பிரதமர் மோடி இரண்டு நாள்களுக்கு முன் மக்களிடையே உரையாற்றும்போது 4- ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் இந்த ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு அவ்வப்போது மக்களின் நலனுக்காக முக்கிய நல திட்ட அறிவிப்புகளை வெளிட்டு வருகிறது. இந்நிலையில்,  ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை மோடி அறிவித்திருந்தார். 

இந்த திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி  அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 3-ஆவது நாளாக இன்றும் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து விளக்கம் கொடுக்கவுள்ளார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான அறிவிப்புகளும், நேற்று வேளாண்த்துறை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 81,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட  இந்தியாவிற்கு  உதவும் வகையில் ரூ.7,546 கோடி நிதி தருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிதி இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள், கொரோனா ஒழிப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts