கடந்த 1952 ஆம் ஆண்டு இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேச தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்பட்டு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலக தாய்மொழி தினமாக முதன்முறையாக 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் கொண்டு வரப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தினம் மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது யுனெஸ்கோ. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கருத்துகள் இந்த தினத்தில் முன்வைக்கப்படும். மேலும், தாய்மொழிகள் பல இன்று காலத்தால் அழிவைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச அளவில் 40 சதவிகிதம் மக்கள் தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பெறாமல் உள்ளனர் எனக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு. எந்த மொழியில் கற்றாலும் அதை அவரவர் தாய் மொழிக்கு கற்பனை செய்துதான் அதன் பொருளை அறிய முடியும். உலகின் முதல் நூறு கண்டுபிடிப்புகளை கண்டுப்டித்தவர்கள் அவரவர் தாய்மொழி மட்டுமே கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாய் மொழியை புறக்கணிப்பது தாயையே புறக்கணிப்பதற்க்குச்சமம். எனவே தாய்மொழியை வளர்போம் தலைமுறைகளை காப்போம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…