காதலனை கரம்பிடிக்கும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி – புகைப்படம் உள்ளே!

Published by
Rebekal

யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் அவரது அழகும் தனது நிஜ வாழ்க்கை முறையில் குழந்தைத்தனமான புத்தியும் தான் அதற்கு காரணம். ஆம் யாரடி நீ மோகினி தொடர் சைத்ரா ரெட்டி அவர்களை பற்றி தான் பார்க்கிறோம்.

இவர் ராகேஷ் குமார் என்பவரை காதலித்து வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பதாகவே அனைவருக்கும் தெரியும்.அவரும் சினிமா துறையில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைத்ரா. அவரது காதலரும் பதிவிட்டுள்ளார். இவரது நிச்சயதார்தத்துக்கு அவரது திரையுலக நண்பர்கள் ரேஷ்மா, ஷபானா, வெண்ணிலா ஆகியோரும் வந்துள்ளனர். சித்ராவுக்கு பல்வேறு ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago