கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்-தமிழிசை

Default Image

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள  கூட்டணி தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 204 வாக்கில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளது. எதிராக 105 வாக்குகள் விழுந்தால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில்  சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது மிகவும் நல்லது.  கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும். தமிழ் என்றும் உயிர்ப்புடன் வளமையாக இருக்கும், அதை காப்பாற்ற ஸ்டாலின் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai