பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு ! மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் அங்கு சீன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அடுத்த மாதம் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் சீன பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மாமல்லபுரம் வந்துள்ளனர்.அங்கு வந்த அவர்கள் இரு தலைவர்களும் தங்கவுள்ள நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025