41 வருடமாக இசைஞானி பயன்படுத்திய இடம்! தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சனை!

Default Image

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. இவர் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புகளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார்.
அவர் வீட்டில் இருப்பதை விட இந்த பிரசாத் ஸ்டுடியோவில் தான் அதிக நேரத்தை செலவிடுவார். இதனால், அவரை எப்போது பார்க்க வேண்டுமென்றாலும்  பிரசாத் ஸ்டுடியோவில் பார்க்கலாம் என்ற பேச்சு திரைத்துறையில் உலாவரும்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் ( பிரசாத் அவர்களின் பேரன்)  அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய சொல்லியுள்ளார். இதற்கு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, அதற்கு வாடகை தருவதாக தெரிவித்தனர்.
ஆனால், இதற்கு பிரசாத் ஸ்டூடியோ தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதனால், இன்று பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குனர் பாரதிராஜா,  சீமான், பாக்யராஜ் ஆகியோர் பாரதிராஜா ஆகியோர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்றனர். ஆனால், அங்கு அவர்களை அலுவலகத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் அங்கு, இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war