சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, இதுவரை மொத்தமாக 1,724 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், இன்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று மட்டுமே 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை சென்னையில் மட்டும் 1,724பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா அதிகம் பேருக்கு பரவியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டுமே 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உள்ளது. மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025