ஈரோட்டில் பப்ஜி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு.!

Default Image

ஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார்.

 நாடு முழுவதும் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எல்லாம் வீடுகளில் முடங்கி உள்ள்ளனர். இந்நிலையில், வீட்டிற்குள் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பொழுதை போக்க ஆன்லைன் விளையாட்டான  பப்ஜி மற்றும் லூடோ ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா நகரை சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவன் வீட்டிற்கு அருகில் திடலில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார். சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்