இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

donald trump AND PM MODI

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பண உதவி செய்யும் நாடுகளை பொருளாதார ரீதியாக தண்டிப்பதாகும். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளார்.

மேலும் 84 செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடு. 2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 40-44% வரை அதிகரித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவின் மருந்து, ஆடை, மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது மிகப்பெரிய வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் இந்தியாவின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படலாம்.

இந்த மசோதாவில், அமெரிக்க அதிபருக்கு இந்த வரியை விதிப்பதில் இருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்தியா, தற்போது அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதன் மூலம் இந்த வரியின் தாக்கத்தை குறைக்க முயல்கிறது.

இந்த மசோதா குறித்து ஆகஸ்ட் மாதத்தில் மேலும் விவாதிக்கப்பட உள்ளது.இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் கிரகாமிடம் பேசியுள்ளார். இந்தியாவுக்கு எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இந்த மசோதா இந்தியாவின் நலன்களை பாதிக்கலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார். இந்த மசோதா இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகளுக்கு சவாலாக அமையலாம் என்று கருதப்படுகிறது, மேலும் இந்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்