பேருந்து மீது ரயில் மோதிய விபத்து.. சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்து பாரூகாபாத் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்து சென்றபோது, கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி சென்ற ஷா ஹுசைன் எக்ஸ்பிரஸ், அந்த பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த பேருந்தின் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். மேலும், 9 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்த ஒன்பது பேரில், ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025