சூப்பர் பேட்ஸ்மேன்களின் பேட் வடிவமைப்பாளருக்கு சரியான நேரத்தில் உதவிய சச்சின்.!

பிரபல பேட் வடிவமைப்பாளர் அஷ்ரப் சவுத்ரி கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சச்சின் பெருந்தொகை கொடுத்து உதவியுள்ளார்.
சச்சின், ஷேவாக், கோலி, கெயில், ஸ்மித் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்து கொடுத்த பேட் ஸ்பெஷலிஸ்ட் அஷ்ரப் சவுத்ரி தற்போது மருத்துவமனையில் உள்ளார்.
மிகவும் பிஸியான பேட் தயாரிப்பாளராக இருந்த அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் கஷ்டப்பட்டார் என அவரது நண்பர் பிரசாந்த் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். அஷ்ரப் சவுத்ரிக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த செய்தி அறிந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் ஒரு பெரிய தொகையை அஷ்ரப் மருத்துவ உதவிக்கு அளித்துள்ளாராம். இதனை அஷ்ரப்பின் நண்பர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!
June 30, 2025
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025