வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

அடுத்த படம் சிம்புவுடன் தான் என இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

silambarasan and vetrimaran

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக வந்த செய்தி தான். இருவரும் இணைந்து செய்ய கூடிய அந்த படம் வடசென்னை 2 எனவும் செய்திகள் பரவ தொடங்கிவிட்டது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது சிம்பு படத்தை பற்றி உறுதியப்படுத்தியது மட்டுமின்றி, எந்த மாதிரியான படமாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என் அடுத்த படம் சிம்புவுடன்தான். ஆனால், நான் சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கும் ‘வடசென்னை’ படத்துக்கும் நேரடி சம்பந்தம் இல்லை, ஆனால் இது அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்,” என அவர் தெரிவித்தார்.

வடசென்னை உலகில்’ (World of Vadachennai) அமைந்த ஒரு தனி கதையாக இருக்கும். இதில் ‘வடசென்னை’ படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெறும், ஆனால் கதை வேறு தளத்தில் பயணிக்கும்,” எனக் கூறினார். மேலும் அவர், தொடர்ந்து இது குறித்து பேசுகையில், நான் சிம்புவிடம் படம் குறித்து பேசிய பிறகு தனுஷை தொடர்பு கொண்டும் பேசினேன்.  அவரிடமும் ‘இந்த படம் ஒன்று, World of Vadachennai-ஆக இருக்கும் அல்லது முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றேன்’ அவர், ‘உடனே உங்களுக்கு எப்படி வேண்டுமோ, அப்படியே எடுங்கள். நான் NOC கொடுத்து விடுகிறேன். பணம் ஏதும் வேண்டாம் சார்’ என அப்போதே கூறிவிட்டார்” எனவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். இதனையடுத்து ரசிங்கர்கள் தனுஷிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்