கர்நாடகாவில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கத் திட்டம்.!

Default Image

மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால்  2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கத் திட்டம் உள்ளதாகவும், மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் சி.என். அஷ்வத் நாராயன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அம்மாநில அரசு 5 மாதத்திற்கு பின், கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. அதாவது,கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன. இனி வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோன்று, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இனி கைகளில் சீல் வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies