தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் தந்தை பெரியார் – கமல்ஹாசன்

பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ.ராமசாமி, இவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார். திராவிடர் கழகத்தை தோற்று வித்தவர் பெரியார். இன்று இவரது 142வது பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் என்றும் புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்!
புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்!
“பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025