தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!

Default Image

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது  போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியது  மற்றும்   சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுஷாந்த் காதலியும், நடிகையுமான  ரியா சக்கரபர்த்தி கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும், ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்  அனுப்பியது.

அதில், நேற்று படுகோனுக்கும், ரகுல் ப்ரீத் சிங்க்கும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் ஆஜர் ஆனார்.

அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று  நடிகை தீபிகா படுகோன்  விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

 அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இன்று ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi