ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

ஐபிஎல் டி20 தொடரின் 12-வது போட்டியில் கொல்கத்தா அணியும் மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் , சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய சுனில் நரைன் 15 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய நிதிஷ் ராணா 22 , ரஸ்ஸல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்தியில் களம் கண்ட மோர்கன் 34 ரன்கள் விளாசினார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 175 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025