மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல் – நாங்கள் அப்படியல்ல! அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல், நாங்கள் அப்படியல்ல என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று தமிழகத்திலும் அதிக அளவில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கிராம சபைகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் இது குறித்து பேசிய தமிழ் திரையுலக நடிகரும், மக்கல் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமல் அவர்கள் கிராம சபை கூட்டம் நடத்தாததற்கு காரணம் கொரோனா காலகட்டத்திற்குரிய வரவு செலவு கேட்கப்படும் என்ற அச்சத்தில் தான் போல என கூறியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் ஓ எஸ் மணியன் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதிலளித்தஓ.எஸ்.மணியன் அவர்கள், கமலஹாசன் மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருப்பதாலும், மக்கள் உயிர் மீது எங்களுக்கு அக்கறை இருப்பதாலும் தான் கிராமசபை கூட்டங்கள் நடத்தப் படவில்லை. எனவே மக்கள் மீது அக்கறை இல்லாத தலைவர்கள் பேசக்கூடிய பேச்சுதான் இது என கமலை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025