கர்நாடகாவில் 17ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு..வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

கர்நாடகத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கபடுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கல்லூரி திறக்கப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முறையான கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசிகளைப் பயன்படுத்துதல் ஆகியவைற்றை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025