பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து தனியாக எடுத்து சென்ற கும்பல்…! என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளி…!

Default Image

பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொண்ட கிருஷ்ணாவை என்கவுண்டரில் சுட்டு கொன்ற போலீசார். 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்பவர் நேற்று அவரது வீட்டின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. சுற்றி வளைத்த கும்பல் அவரின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கழுத்தில்லாமல் இருந்த வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வீராவின் தலை எங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் நேற்று இரவு முதலே காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,  இந்த கொடூர கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி  வந்தனர்.

இதனையடுத்து, புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் கிருஷ்ணா என்பவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இதனையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணாவுக்கும் வீராவிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்த கொடூரக்கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts