திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெயிடு…!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில், அதிகாரிகளின் சோதனை மட்டுமல்லாது, வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையும் தீவிரமாய் உள்ளது.
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அவரது, வீடு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.