#BigBreaking:கர்நாடகாவில் பெங்களூர் உட்பட 7 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் – எடியுரப்பா

Default Image

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா வியாழக்கிழமை இரவு மாநிலத்தின் எட்டு நகரங்களான பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிதர், தும்குரு, உடுப்பி மற்றும் மணிப்பால் ஆகிய இடங்களில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ (இரவு ஊரடங்கு உத்தரவு) விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 20 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் உரையாற்றிய முதலமைச்சர் யெடியூரப்பா, மாநிலத்தின் எட்டு நகரங்களில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்றார். இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (யூ.டி.) பிரதிநிதிகளுடன் ஒரு உயர் மட்ட சந்திப்பை நடத்தியதோடு, தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மண்டலங்கள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய சில நிமிடங்களில் கர்நாடகாவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts