குடும்ப அட்டைகளில் இவர்களின் பெயரை நீக்கவில்லை என்றால் ரத்து – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Default Image

போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை பொது விநியோக தரவு தளத்தில் இருந்து பெற்று அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,பிராக்சி முறை பரிவர்த்தனை அங்கீகாரச் சான்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும்,அங்கீகாரச்சன்று இல்லாமல்,பிராக்சி முறையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றி பிறருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு,சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதி செய்யப்படும் பட்சத்தில்,ரேசன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,இறந்தவரின் பெயர் குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டை தரவு தொகுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அக்குறிப்பிட்ட குடும்ப அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies