#JustNow: வேன் மோதி மாணவன் உயிரிழப்பு – பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்!

வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம்.
சென்னையில் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி வாகனம் மோதி, மாணவன் தீக்ஷித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் உட்பட 3 பேரை பணி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்து குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28-ஆம் தேதி தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதியதில் மாணவன் தீக்ஷித் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025