தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் பலி.!

கொரோனா தொற்றுக்கு நேற்று தேனியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழப்பு.
சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24ம் தேதி அதவாது நேற்று புதிதாக 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 491 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிப்பு வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,640 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு நேற்று தேனியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 521 பேர் குணமடைந்தனர்