#Breaking : 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு.! மஹாராஷ்டிரா பேருந்து தீ விபத்தில் பரிதாபம்.! 

Maharatra Bus Fire Accident

மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா பகுதியில் பேருந்து தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பேருந்து தீ விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என்றும் மற்ற பயணிகள் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உட்படுத்தப்பட்டுள்னர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்