இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்.!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு, களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நிதானமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு வருகிறார்கள். 3-வது ஆள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலிக் அதனஸ் 37 ரன்களுடனும், ஹோல்டர் 11 ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக ஜடேஜா 2 விக்கெட்டுகள், அஸ்வின், சிராஜ் மற்றும் அறிமுக வீரர் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்யும் எடுத்துள்ளனர்.