தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிரடி சோதனை.!

தமிழகத்தின் தஞ்சை, கோவை, நெல்லை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் வீட்டிலும் காலை முதலே சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.