சிவாஜி படத்திற்கு முன்னுரிமை கொடுத்த சரோஜாதேவி! கடும் கோபத்தில் இருந்த எம்.ஜி.ஆர் ?

நடிகர் எம்.ஜி.ஆர்க்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி . இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், படகோட்டி, அன்பே வா, நான் ஆணையிட்டால், பெரிய இடத்து பெண், அரச கட்டளை, ஆசை முகம், என் கடைமை, உள்ளிட்ட படங்கள் எல்லாம் காலம் கடந்து பேசும் படமாக இருக்கும் என்றே கூறலாம். கிட்டதட்ட இவர்கள் இருவரும் நடித்த ஒரு சில படங்கள் வேண்டுமானால் சரியாக வரவேற்பை பெறலாம் இருந்திருக்கலாம்.
ஆனால், பல படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி காலம் கடந்து பேசும் வகையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இப்படி எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஒன்றாக நடித்த சரோஜாதேவி மீதே எம்.ஜி.ஆர் ஒரு சமயம் மிகுந்த வருத்தத்தில் இருந்தாராம். ஏனென்றால், அந்த சமயம் சரோஜாதேவிக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு புதிய பறவை திரைப்படத்திலும் படகோட்டி திரைப்படத்திலும் ஒரே சமயத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் தான் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றதாம். ஒரு நாள் அந்த படப்பிடிப்புளும், ஒரு நாள் இந்த படப்பிடிப்பிலும் மாற்றி மாற்றி நடித்துக்கொண்டு இருந்தாராம் நடிகை சரோஜாதேவி. அந்த சமயம் கலர் படங்கள் வந்த காரணத்தால் இரண்டு திரைப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த செய்தியையும் படியுங்களேன்-அடேங்கப்பா!! 300 கோடி பட்ஜெட்டில் 3டி எஃபெக்ட்டுடன் விக்ரமின் ‘கர்ணா’ பட டீசர்! ரசிகர்களுக்கு ஷாக்…
எனவே, இந்த மாதிரி படங்களில் நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட கூடாது என எண்ணி இரண்டு படங்களிலும் நடிக்க சரோஜாதேவி ஒப்புக்கொண்டு நடித்து வந்துள்ளார். ஆனால், படகோட்டி படத்தை விட புதிய பறவை படத்திற்கு சரோஜாதேவி அக்கறை அதிகமாக காட்டினாராம். படகோட்டி படத்தில் ரோமன்ஸ் காட்சிகள் மட்டும் தான் வரும். ஆனால், புதிய பறவை படத்தில் அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரம் இருந்தது.
படத்தினுடைய க்ளைமாக்ஸ் காட்சியில் கூட சரோஜாதேவியை வைத்து தான் முடிப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது. எனவே தனக்கு இந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் இருந்த காரணத்தால் சரோஜாதேவி படகோட்டி படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புதிய பறவை படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்.
இது எம்.ஜி.ஆருக்கு தெரிய வர உடனடியாக சரோஜாதேவி மீது மிகவும் கோபப்பட்டாராம். அந்த கோபத்தை வெளிக்காட்டாமல் சில நாட்கள் அவர் சரோஜாதேவியிடம் பேசவே இல்லயாம் படத்தில் நடித்து முடிக்கும் இறுதி நாட்களில் தான் பேசினாராம். இந்த தகவலை சினிமா ஆய்வாளர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் சரோஜாதேவி நடித்த இந்த படகோட்டி , புதிய பறவை இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.