வடக்கு மெக்சிகோவில் 2 தனியார் விமானங்கள் மோதி விபத்து.! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி.!

planes-crash

வடக்கு மெக்சிகோ மாநிலமான துராங்கோவில் இரண்டு தனியார் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு துராங்கோவின் லா கலன்சிட்டா நகரில் உள்ள சிறிய விமான ஓடுதளத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ஓடுதளத்தில் இரண்டு செஸ்னா இலகுரக விமானங்கள் மோதிக்கொண்டுள்ளது. இதில் ஒரு விமானம் புறப்படும்போதும், மற்றொரு விமானம் தரையிறங்கும் போது மோதிக்கொண்டதாக மாநில பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலுக்கு பிறகு இரண்டு விமானங்களும் தீ பிடித்து எறிந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 5 பேரும் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து மாநில அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்