அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

heavy rain in tamil nadu

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனிநகர், மதுரை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai