கள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

UdhayanidhiStalin

கள்ளக்குறிச்சி : மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில்  ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.  ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்து அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் மேலும் மருத்துவமனையில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றியும் விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷச்சாராயம் அருந்தி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் விசாரித்தார்.

அதனை தொடர்ந்து, விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின்
உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.  அந்த நிவாரண தொகைக்கான காசோலையையும், அஞ்சலி செலுத்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies