பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மகன் பேசுகையில், அங்கு பயணிகளை தாக்கிய பயங்கரவாதிகள் முஸ்லீம் - இந்துக்கள் என தனியாக பிரிக்க சொன்னதை கேட்டதாக கூறியுள்ளார்.

Pahalgam Attack Victim son

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவரும் ஒருவர். அவரும் தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள்ளார். தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததைஅவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ இடத்தில் இருந்து பார்த்துள்ளார் .

அந்த கோர நிகழ்வு பற்றி சிறுவன் கூறும்போது சில அதிர்ச்சி தகவலையும் கூறினான். சிறுவன் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ​​”மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் நாங்கள் இருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்ததை நாங்கள் உணர்ந்து மறைந்து இருந்தோம்.

ஆனால், அவர்கள் எங்களை கண்டுபிடித்தனர். இரண்டு பயங்கரவாதிகளை நான் நேரில் பார்த்தேன். அவர்களில் ஒருவர் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களை தனியாக பிரிந்து இருக்கும்படி கூறியதை நான் கேட்டேன். பிறகு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு சென்றனர். உள்ளூர்வாசிகள் உடனடியாக வந்து, நாங்கள் கீழே இறங்கிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்திய இராணுவம் வந்துவிடும் எனக் கூறினார்கள். பயங்கரவாதிகள் என் தந்தையை பேச விடவில்லை.” என்று இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினான்.

அவரது மனைவி ஷீத்தல் கல்தியா ANI செய்தியாளரிடம் கூறும்போது, ​​” துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ஒளிந்து கொள்ள ஓடி வந்தோம். ஆனால், அந்த பகுதி முழுவதையும் வெளிப்படையாக இருந்ததால் மறைந்திருக்க இடமில்லை. திடீரென எங்கள் எதிரில் ஒரு பயங்கரவாதி நின்றான். இந்துக்களை ஒருபுறமும், இஸ்லாமியர்களை மறுபுறமும் பிரிந்து நிற்குமாறு கட்டளையிட்டான். எல்லாருமே ஒரு நீளமான துப்பாக்கியை வைத்திருந்தார்கள். சுட்டுக் கொகொல்வதற்காக அங்கேயே நின்றுகொண்டிருந்தான். 6-7 பேரை எங்களுக்கு முன்னால் சுட்டுக் கொன்றான். சுடப்பட்ட 2-3 நிமிடங்களுக்கு மேல் அந்த ஆட்கள் உயிர் பிழைக்கவில்லை. காஷ்மீரில் ஹிந்து-முஸ்லிம் மோதலை நாங்கள் அனுபவிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள்தான் அங்கு மோதல்களை உண்டாக்குகிறார்கள் என்று நான் உணர்கிறேன்.” என தகவல்களை தெரிவித்தார்.

தாக்குதல் பற்றி அறிந்ததும் உள்ளூர் காஷ்மீர் மக்கள் தான் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், அங்கு குதிரை சவாரி செய்து பிழைப்பு நடத்தி வந்த சையது ஹுசைன் ஷா எனும் இஸ்லாமிய நபர் சுற்றுலா பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் மோதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்