“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்த சீசன் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது என தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

shreyas iyer

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை பெங்களூரு அணி முத்தமிட்டது.

ஒரு பக்கம் பெங்களூர் அணி வெற்றிபெற்றாலும் மற்றொரு பக்கம் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது வருத்தமாகவும் மாறியுள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டுக்கு முன்பு 2014-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டும் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அந்த போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்த நிலையில் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கடைசி வரைபோராடியும் பஞ்சாப் அணியால் வெற்றி பெறமுடியவில்லை. எனவே, பஞ்சாப் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மன வேதனையில் இருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகு வருத்தத்துடன் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ” நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம், ஆனால் இறுதியில் சிறு வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். 190 ரன்கள் எடுக்கக்கூடிய இலக்கு, ஆனால் எங்கள் பேட்டிங் சற்று தடுமாறியது.

குறிப்பாக நான் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தது அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஆர்சிபியின் பந்துவீச்சு, குறிப்பாக க்ருனால் பாண்டியாவின் மாறுபட்ட பந்துவீச்சு, எங்களை கட்டுப்படுத்தியது. இருப்பினும், எங்கள் வீரர்கள் இறுதி வரை போராடினர், அதற்காக பெருமைப்படுகிறேன். இந்தத் தோல்வி எங்களுக்கு பாடமாக இருக்கும், அடுத்த சீசனில் மீண்டும் வலுவாக வருவோம்” என பேசினார்.

அதனைத்தொடர்ந்து மேலும் பேசிய அவர் ” இந்த சீசன் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. எங்கள் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தினர். இறுதிப்போட்டியில் தோல்வி வேதனையளிக்கிறது, ஆனால் இது எங்களை மேலும் வலிமையாக்கும். அடுத்த சீசன் கோப்பையை வெல்வோம். ஆர்சிபி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது, அவர்களுக்கு வாழ்த்துகள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்