TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!

நேற்று நடந்த TNPL போட்டியில் பெண் நடுவர் அவுட் கொடுத்ததால் கடுப்பாகி அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Ashwin loses cool

கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறைவான ரன்கள் எடுத்தது மட்டுமின்றி அஸ்வின் ஆட்டமிழந்து நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்களில் கடைசி சில ஓவர்களில் வந்து விளையாடும் அஸ்வின் TNPL தொடர் தொடங்கிவிட்டது என்றாலே ஓப்பனிங் வந்து விளையாடுவார். அப்படி தான் நேற்று நடந்த அந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்கள் விளாச களமிறங்கினார்.

தொடக்கத்தில் சரியாக விளையாடினாலும் கூட போக போக கொஞ்சம் தடுமாறினார் என்று சொல்லவேண்டும். இறுதியாக, 4-வது ஓவரை வீச வந்த சாய் கிஷோர் கடைசி பந்தில் அற்புதமாக ஸ்டிக் லைனில் போட்டு அஸ்வினை LBW-ஆக்கினார். சாய் கிஷோர் நடுவரிடம் அப்பில் செய்த நிலையில் அவுட் கொடுக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத அஸ்வின் மேம் இது அவுட் இல்லை என்பது போல பெண் நடுவரிடம் கோபப்பட்டார்.

ஆனால், பெண் நடுவரும் இது அவுட் தான் என கூறினார். அஸ்வினால் ரிவியூவும் எடுக்க முடியவில்லை ஏனென்றால், ஏற்கனவே அவருடைய அணி வீரர்கள் 2 முறை ரிவியூவ் எடுத்து அது தோல்வியில் முடிந்தது. எனவே, அஸ்வினால் ரிவியூவும் கேட்கமுடியவில்லை நடுவர் சொன்ன முடிவை ஏற்க முடியாமல் மிகவும் கோபத்துடன் பேட்டை வைத்து தன்னுடைய கால்களில் அடித்துக்கொண்டு பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் இது அவுட் தான் எனவும் மற்றோரு பக்கம் ரிவியூ பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் என தெரிவித்து வருகிறார்கள். மேலும்,  94 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி அதிரடியாக விளையாடி 11.5 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Dinasuvadu (@dinasuvadutamil)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்