அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

aiadmk case

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானத்திற்கு எதிராக, கட்சி உறுப்பினர் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு, இபிஎஸ்-இன் தலைமைக்கு சவாலாக அமைந்துள்ளது. நீதிமன்றம், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உறுதிப்படுத்தியது. “பொதுக்குழு மூலம் இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தது, கட்சி விதிகளுக்கு எதிரானது,” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

சூரியமூர்த்தி, பொதுக்குழுவின் தீர்மானம் செல்லாது என்று வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை மேலும் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த முடிவு, அதிமுகவின் உட்கட்சி அரசியல் மோதல்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.இபிஎஸ் தரப்பு, பொதுக்குழு தீர்மானம் கட்சி விதிகளுக்கு உட்பட்டது என்றும், இந்த வழக்கு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்றும் வாதிட்டது.

இருப்பினும், நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. “அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை மீறி, பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு உரியது,” என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பு, இபிஎஸ்-இன் தலைமை பதவியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு கட்சியின் எதிர்கால அரசியல் உத்திகளை பாதிக்கலாம். சூரியமூர்த்தி உள்ளிட்ட வழக்குதாரர்கள், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்