”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!
பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என கூறி வந்த ராமதாஸ் மனநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுளதாக தெரிகிறது.

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆம், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்ய முக்கிய நபர்கள் முயன்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என கூறி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ பயணமாக மூன்று நாள் சென்னை சென்று இன்று விழுப்புரம் தைலாபுரம் திரும்புகையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், பா.ம.க. தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
அவர்கள் தான் எனக்கு வழிகாட்டிகள். இந்த தொண்டர்கள் என்று நீங்கள் சொன்னீர்களே அவர்கள் தான் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டிகள். என்னை குலதெய்வமாக, கடவுளாக நினைக்கக்கூடிய கோடான கோடி தொண்டர்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்வேன்”எனப் பேசினார்.
மேலும், வரும் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். அப்பொழுது கூட்டணி குறித்த செய்தியை அவர் சொல்லப்போகிறாராரா? அல்லது அன்புமணியுடன் பிரச்சினை முடிவு குறித்து பேசப்போகிறாரா? என பாமக தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.