டெல்லியில் பூமிஹின் முகாம் இடித்து தரைமட்டம்.! போராட்டம் நடத்திய அதிஷி கைது.!
கல்காஜியின் பூமிஹின் முகாமில் இடிப்பதற்கு எதிராகப் போராடிய முன்னாள் முதல்வர் அதிஷியை டெல்லி போலீசார் கைது செய்தனர்

டெல்லி : டெல்லியில் உள்ள சட்டவிரோத குடிசைப்பகுதிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதராசி முகாம் உட்பட பல இடங்களில் குடிசைப்பகுதிகள் இடிக்கப்பட்ட பிறகு, கோவிந்த்புரி பகுதியில் உள்ள கல்காஜியின் பூமிஹீன் முகாமில், அமைந்துள்ள குடிசைப்பகுதிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்ட பிறகு, புல்டோசர்கள் மூலம் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன. நேற்றைய தினம், ஜூன் 10 ஆம் தேதிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு டிடிஏ முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், குடியிருப்புக்களை இடிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் (DDA) நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக சட்டவிரோத கட்டுமானத்தின் மூலம் மக்கள் DDA நிலத்தில் குடிசைகள் மற்றும் வீடுகளைக் கட்டியுள்ளனர்.
ல்காஜியின் பூமிஹீன் முகாமில், பலர் இரண்டு மாடி வீடுகளைக் கூட கட்டியுள்ளனர், இங்கு சுமார் 300 குடிசைகள் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி நேற்று (செவ்வாய்க்கிழமை) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் எதிர்த்துப் பேச முடியாது என்றும், இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் 8 அன்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறியிருந்தார்.