WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக ஆஸி அணி 74 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அதன்பிறகு, தங்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸி 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே, 281 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 282 எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அமைந்தது. வெற்றிபெறவேண்டும் என இரண்டாவது இன்னிங்ஸை தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக தொடங்கியது.
இந்த போட்டி சற்று மெதுவாக செல்லும் என ஆஸி அணி எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியை நான் ஒருவனே நின்று முடித்துக்கொடுக்க போகிறேன் என்கிற வகையில் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ராம் விளையாடி நேற்றே சத்தம் விளாசினார். 4–வது நாள் இன்று தொடங்கிய நிலையில், அணிக்கு இன்னும் கோப்பையை வெல்ல 69 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் இருந்தது. மூன்றாவது நாள் நேற்று முடிந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது.
இன்று தங்களுடைய 4-வது நாள் ஆட்டத்தை மெதுவாக தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் எதுவும் விடாமல் நிதானமாக விளையாடியது . ஐடன் மார்க்ராம் பவுண்டரி சிங்கிள் என கலந்து நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். அவர் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் கூட அணியில் விக்கெட் இருந்தது.
எனவே, இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 83.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு கோப்பையும் வழங்கப்பட்டது. ICC உலகக்கோப்பை போட்டி என்று வந்தாலே ஆஸி அணி எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம் அப்படி பட்ட ஒரு பலம் வாய்ந்த அணியை தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்றுள்ளது கிரிக்கெட் வரலாற்றி ஒரு சிறப்பான தருணமாகவும் அமைந்தது.