வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதிக்கு பதிலாக 7-ம் தேதி நிறைவு பெறும் என அறிவிப்பு. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரை டிச.6ம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் […]
பழனி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம் உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் […]
மு.க.அழகிரி தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக, வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2014 -ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி, திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த முக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். […]
நாகலாந்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாகலாந்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர். இதனையடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கவும், கைகழுவ வசதி ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு, ரூ.500 அபராதமும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளர் ஜெ.ஆலம் […]
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திண்டுக்கல், சென்னை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவம் மக்கள் மத்தியில்,அச்சத்திற் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இதற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள். […]
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் பதித்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு […]
ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 152 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பலி. ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 6,500 பயங்கரவாதிகள் இயங்கி வருவதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் தி பாகிஸ்தான் இயக்கத்தினர் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உள்விவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஆப்கான் படைகளுக்கு எதிராக நடத்திய சமீபத்திய மோதல்களில் கொல்லப்பட்ட தலீபன் தீவிரவாதிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்களில் […]
அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. பாஜக கட்சி சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை யாத்திரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பாஜக-வினர் யாத்திரை நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் காண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. அதன்படி, ‘மதங்களின் […]
தியேட்டர் உரிமையாளர் இடதகறாரில், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அகமது படேல் உடல்நிலை தேறி வருவதாக தகவல். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான அகமது படேல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் பைசல் பகுத்தறிவு தெரிவித்துள்ளார். அகமது படேலின் உடல் நிலை குறித்து, அவரது மகன் ஃபைசல் […]
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி. 2021-ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு, இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரையிலும் அவகாசம் […]
2020-ஐ விட, 2021ம் வருடம் மிகவும் மோசமானதாக இருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பரவல், தற்போது வரை ஆட்டிப்படைத்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வைரஸ் பரவல் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்கா ஆற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை […]
கொரோனா அச்சுறுத்தலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இன்னும் 2 மாதத்திற்கு வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், திருத்தணி அரசு பொது மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், கடை வீதிகளுக்கு சென்று பொதுமக்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் இன்னும் முழுமையாக அறியாமல், அலட்சியத்துடன் செயல்படுவதாவும், […]
தனது சொந்த கிராமத்தில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தியா முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த தீபாவளியை பல விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், அவரது சொந்த கிராமமான விராலிமலைக்கு சைக்கிளில் சென்று, மக்களுக்கு பரிசு கொடுத்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Deepavali at my native village – the villagers […]
6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் டீசர் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலைப்பதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகஉள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில், தளபதி விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், டீசர் வெளியாக இன்னும் சில […]
பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால், இந்த வருடம் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் […]
மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. நேற்று நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அப்போது தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு […]
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பும் நீடிக்கும் குழப்பங்கள். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகள், டொனால்டு டிரம்ப் அவர்கள் அதிபராக இருந்தார். இவரது பதவி காலம் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், […]
பாலைவனமோ? பனிமலையோ? ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு தான் என்னுடைய தீபாவளி. இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில், தீபாவளியை கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், பனிமாலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கையோ அங்கு தான் […]