நாம் பயன்படுத்தும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வழங்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு.
நம்மில் பலரும் இன்று கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும், செயலில் உள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து, தற்செயலான மரணம் ஏற்பட்டால், நமக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
இந்த காப்பீட்டு விதியின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இலவச தற்செயலான மரண பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்தால் 90 நாட்களுக்குள் உரிமை கோரலாம் என்றும், இந்த இலவச தற்செயலான ஆயுள் அட்டை ஒரு கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் மட்டுமே வழங்கப்படும் என்பதும் இதன் விதி ஆகும்.
ஒருவர் ஒன்றிற்க்கு மேற்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வந்தால், அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு அட்டையிலும் காப்பீடு தொகையை உரிமை கோர முடியாது. மேலும், இந்த காப்பீட்டுத் தொகையை ஒரே ஒரு கார்டில் மட்டுமே கோர முடியும் என்பது இதன் விதி.
நாம் பயன்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், நமக்கு தற்செயலான மரண ஏற்படும் போது, அந்த அட்டையின் அடிப்படையில் ரூ .30 – ரூ .10 லட்சம் வரை கிடைக்கும். நாம் பயன்படுத்தக் கூடிய அட்டையான, ” ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக ஜனன் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் ரூபே டெபிட் கார்டில் ரூ .30,000 தற்செயலான மரண அட்டைக்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும்,பிரதான் மந்திரி ஜன தன் கணக்கு அட்டை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ .2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
சிலர் இந்த அட்டையை பயன்படுத்தாமலே வைத்திருப்பர். அட்டையை வைத்திருப்பவருக்கு திடீரென மரணம் ஏற்படும் போது, அந்த அட்டை செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே, அந்த அட்டைக்கு உரிமைகோரால் வழங்கப்படுகிறது. அட்டை வைத்திருப்பவரின் மரணத்திற்கு முந்தைய கடைசி அறுபது நாட்களில் ஒரு முறையாவது பரிவர்த்தனை செய்திருந்தால், அவர்கள் இந்த ஆயுள் காப்பீட்டுக்கான உரிமையை கோர முடியும்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…