இந்தியா

ரூ.250 உணவுக்கு ஆசைப்பட்டு ரூ.50,000-ஐ இழந்த பெண்!

கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்க ஆசைப்பட்டு, ரூ.49,996-ஐ இழந்துள்ளார்.  இன்று பலரும் இணையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் கொண்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதில் மோசடியில், ஈடுபடுபவர்களும் பெருகிவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண் வீட்டில் சமைப்பதில்லை எப்போதுமே ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனை அடுத்து […]

cheating 4 Min Read
Default Image

சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் […]

buffalo 3 Min Read
Default Image

உருமாறிய கொரோனா வைரஸ் : இந்தியாவில் 6 பேருக்கு தொற்று உறுதி!

உருமாறிய கொரோன வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய  பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது […]

coronavirus 3 Min Read
Default Image

கர்நாடகாவின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா இன்று காலை சிக்கமகளூரு மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடலை அதிகாலை 2 மணி அளவில்  காவல்ததுறையினர் மீட்டுள்ளனர்.அவர் தற்கொலை குறித்து ஒரு கடிதம் கைப்பற்றுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .    

SL Dharmegowda 1 Min Read
Default Image

கோயில் அஸ்திவார பூஜைக்காக 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற பூஜைக்காக தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால் தயிர் மற்றும் நெய் ஊற்றி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயணன் என்னும் கோவில் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. எனவே அந்த கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அஸ்திவார பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் […]

#Rajasthan 4 Min Read

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்!

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான […]

iphonefactory 3 Min Read
Default Image

ஒடிசா புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவில் மாதங்களுக்கு பின் மீண்டும் திறப்பு!

ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்பவர்களுக்கு கோவிட்-19 எதிர்மறை சான்று கட்டாயம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில்,  சமீபகாலமாக பொது […]

Covid 19 4 Min Read
Default Image

மாமியார் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் ஓடிய புது மருமகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில் 70 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் உடன் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் ஒரு பெண் மாமியார் வீட்டில் இருந்து 70 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவரது கணவர் பிங்கு என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷாம்லி மாவட்ட காவல் நிலையத்தில் அவரது கணவர் அளித்த […]

jewelery 4 Min Read
Default Image

அடுத்த ஆண்டு விற்பனையத் தொடங்க உள்ள டெஸ்லா – மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர்  நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான  உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் […]

NitinGadkari 3 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்க்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், டெஹ்ரா-டுனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதனையடுத்து அவர், நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை […]

AIIMS Delhi 3 Min Read
Default Image

திருமண நாள் பரிசாக மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி கொடுத்த கணவர்!

பிரேசிலில் வசித்து தர்மேந்திரா என்பவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இன்று பலருக்கும் நாம் வாழும் இந்த பூமியில் ஒரு சென்டில் நிலம் வாங்குவதே கனவாக இருந்து வருகிற நிலையில், தனது ஆசை மனைவிக்காக எட்டாம் ஆண்டு திருமண நாளில் நிலவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் தர்மேந்திரா என்பவர். பிரேசிலில் வசித்து வரும் இவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு […]

Moon 3 Min Read
Default Image

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்கள் நான்கு மாநிலங்களில் ஒத்திகை!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று மற்றும் நாளை நான்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறையாமல் காட்டிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவில் சற்றே குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டே உள்ளது. […]

coronavirus 3 Min Read
Default Image

ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிச. 31-ல் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காந்தேரி கிராமத்திற்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 1,195 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, 201 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவுள்ளதாகவும், அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31 ஆம் […]

#PMModi 3 Min Read
Default Image

சரக்கு ரயில் போக்குவரத்து – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.  இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும்  பிரதமர் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர்  ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே  அமைச்சர்  பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 351 கி.மீ நீளமுள்ள நியூ […]

#PMModi 4 Min Read
Default Image

ஜனவரி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி – மத்திய அரசு உத்தரவு

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், ஜனவரி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் மழை காரணமாக வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவால் வெங்காய உற்பத்தியும் கடுமையாக குறைந்தது. இதனால், சில்லறை, மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு கெடுபிடி ஏற்பட்டது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதையடுத்து, வெங்காயத்தின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபரில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் […]

#CentralGovernment 2 Min Read
Default Image

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை ஜனவரி 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. […]

coronavirus 2 Min Read
Default Image

அசாமில் விரைவில் மூடப்படும் அரசு மதரஸாக்கள்.!

அசாமில் மூன்று நாள் அசாம் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் மதரஸா மாகாண மயமாக்கலை ரத்து செய்வதற்கான மசோதாவை அசாம் அரசு இன்று தாக்கல் செய்தது. குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய பின்னர் ஊடகங்களுடன் பேசிய அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மசோதா நிறைவேற்றப்பட்டதும், மாநில அரசால் மதரஸாவை நடத்தும் நடைமுறை முடிவுக்கு வரும் என்று கூறினார். ஒரு அறிக்கையின்படி, அசாமில் 614 அரசு உதவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் மற்றும் சுமார் 900 […]

assam 3 Min Read
Default Image

வேளாண் சட்டங்கள்: டிசம்பர் 30-ல் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு!

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 33 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு 5 […]

delhifarmersprotest 3 Min Read
Default Image

திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்ற 21 வயதான ஆர்யா ராஜேந்திரன்!

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன், இன்று பதவியேற்றார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி, திருவனந்தபுரம், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன், அவரை எதிர்த்து போட்டியிட்ட யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து, […]

#Kerala 3 Min Read
Default Image

பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் விவசாயிகளால் சேதம்!

பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் டெல்லியில் இதுவரை விவசாயிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசால் பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் அழைக்கப்பட்டு பேசினாலும், முழுவதுமாக மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் கோரிக்கையாக […]

Amarinder Singh 4 Min Read
Default Image