இந்தியா

#Breaking: நடிகர் ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார். படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக […]

apollo 3 Min Read
Default Image

#BREAKING: அடுத்தவாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு..!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி பல நாடுகளில்உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நான்கு  தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா […]

#Vaccine 3 Min Read
Default Image

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 […]

#Farmers 2 Min Read
Default Image

போலி டிஆர்பி… BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது..!

போலி டிஆர்பி வழக்கில் மும்பை காவல்துறை நேற்று புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.  டிஆர்பி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பதினைந்தாவது நபர் பார்த்தோ தாஸ்குப்தா. பார்த்தோ தாஸ்குப்தா புனே மாவட்டம் ராஜ்காட் காவல் நிலைய வரம்பில் இருந்து குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.யு) கைது செய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, […]

Arrested 3 Min Read
Default Image

அதிர்ச்சியூட்டும் சம்பவம் … காவல் அதிகாரி என கூறி 19 வயது சிறுமி மருத்துவமனையில் வன்கொடுமை..!

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 19 வயது நோயாளியை  47 வயதான  அரசு மருத்துவமனை பாதுகாப்பு காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு நடந்தது. அந்த சிறுமி முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். எஃப்.ஐ.ஆரில், பாதுகாப்புக் காவலர் தன்னை காவல்துறை அதிகாரியாக கூறி தனது அறைக்குள் நுழைந்ததாக அந்த சிறுமி தெரிவித்தார். பின்னர், தனது சிகிச்சை குறித்து அவளிடம் […]

Pune hospital 3 Min Read
Default Image

டிரைவர் இல்லாத ரயில் சேவை – வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்.!

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை […]

#Delhi Metro 3 Min Read
Default Image

வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் , பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின்  96-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி  மரியாதை செலுத்தினார்கள்.மேலும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். 96 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.மக்களவை செயலகத்தால் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகம் […]

#PMModi 3 Min Read
Default Image

9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி – இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று  நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். பிரதமரின் கிசான் திட்டம் : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த […]

#PMModi 3 Min Read
Default Image

ஜீன்ஸ் அணிய மறுத்த மனைவி.. முத்தலாக் கூறிவிட்டு தீக்குளித்த கணவர்..!

அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.  அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் […]

Hapur 3 Min Read
Default Image

பூடானுக்கு மருத்துவ சாதனங்களை வழங்கியது இந்தியா.!

கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி. பி.சி.ஆர் மருத்துவ சாதனங்களை பூட்டான் அரசுக்கு இந்தியா வழங்கியது. இதுகுறித்து இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது […]

Bhutan 3 Min Read
Default Image

வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை – ஹரியானா துணை முதல்வர்

வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்று ஹரியானா துணை முதல்வர் கூறுகிறார்.   புதிய மத்திய வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்றும், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு உறுதியான ஆலோசனைகளை வழங்குமாறு ஹரியானாதுணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று தெரிவித்தார். ஹரியானாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உறுதிப்படுத்த முடியவில்லை என்று நினைக்கும் நாளில் தனது ராஜினாமாவை வழங்குவதாக ஜன்னாயக் ஜந்தா கட்சி (ஜே.ஜே.பி) தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். இன்று செய்தியாளர் மத்தியில் […]

DeputyCM 2 Min Read
Default Image

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்.!

மகாராஷ்டிராவில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நவி மும்பையில் வாஷி க்ரீக் பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள வாஷி க்ரீக் பாலத்தில் ஒரு பெண் கிடப்பதாக வாஷி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, ​​அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த […]

#Maharashtra 3 Min Read
Default Image

சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உச்சநீதிமன்றத்தை நாடிய கேரளா அரசு..!

வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 5,000 ஆக உயர்த்துமாறு உத்தரவிட்ட மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து தனது மனுவில், சபரிமலை கோயிலில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் இங்கிலாந்தில் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், புதிய வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து […]

#Sabarimala 4 Min Read
Default Image

#Curfew:கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ்

கர்நாடகாவில்  இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த  இரவு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த இரவு ஊரடங்கு உத்தரவை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதை வாபஸ் பெற்றுள்ளது அம்மாநில அரசு. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று இரவு முதல் ஜனவரி 1 வரை காலை 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்க திட்டமிடப்பட்டது. “பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டது.அதன் பின்பு மூத்த அதிகாரிகளுடன் நடந்த […]

Curfew In Bangalore 2 Min Read
Default Image

காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு.!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் என்றாலே திரிணாமூல் காங்கிரஸ், […]

#Congress 4 Min Read
Default Image

#Farmer Protest:இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே -ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து  மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் . இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய  சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் […]

Farmers protest 3 Min Read
Default Image

மத்திய அரசாங்க வேலை – 18 முதல் 27 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய உளவுத்துறை காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central […]

#CentralGovernment 4 Min Read
Default Image

குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி ! பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் […]

farmersbill2020 3 Min Read
Default Image

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு

சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெற்று வருகிறது .ஆகவே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.அவரது உரையில் , விஸ்வ பாரதி இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுவதால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு பெருமையான தருணம்.விஸ்வ பாரதி என்பது குருதேவின் சிந்தனை, பார்வை மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாகும். […]

#PMModi 3 Min Read
Default Image

அவசரமாக தரையிறக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம்.!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று புறப்படும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிக்கப்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா […]

#SupremeCourt 3 Min Read
Default Image