ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே நேரத்தில் ஈரான் இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது அதே வேகத்தில் ஏவுகணைகளை வீசி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் […]
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை. 18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 2 நாள்களுக்கு முன்னதாக G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தபோது, டிரம்ப் என்னை டெலிபோன் மூலம் ‘வாஷிங்டன் வழியாக வாருங்கள், இரவு உணவு சாப்பிடலாம், […]
ஈரான் : ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்து நடவடிக்கைகாக ஈரான் தனது வான்வெளி கட்டுப்பாடுகளைத் திறந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் அடங்கிய மற்றொரு குழு நேற்றிரவு டெல்லியை வந்தடைந்தது. இந்தியா ஜிந்தாபாத் என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர். […]
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள் மணிமாடம்’, 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகன நிறுத்தம், உணவு, காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், […]
ஈரான் : இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஈரானே அதிக சேதங்களை சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 639 பேர் பலியான நிலையில், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இஸ்ரேலில் குடியிருப்பு பகுதிகளில், ஏவுகணைகளுக்குள் சிறிய ரக குண்டுகளை வைத்து ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த குண்டுகள் […]
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து […]
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமை, தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமை, மற்றும் ஆலை நிர்வாகங்களின் அலட்சியம் ஆகியவை கருதப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 […]
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை நேற்று ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது, பீர்ஷெபாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இஸ்ரேலிய […]
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், நேற்றைய தினம் மணி கண்ட்ரோல்.காம் என்கிற வணிக செய்தி ஊடகம் பக்கத்தில், ‘திமுக எம்.பியும், கலாநிதி மாறனின் சகோதரருமான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் […]
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய “தனிப்பட்ட செலவு” என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது, இணையத்தில் கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் ஆறு நாட்களை கடந்து நீடித்து வருகிறது. நேற்று ஜெருசலேம் பகுதியில் இரவு முழுவதும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதால் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலை குறி வைத்து […]
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் உட்பட மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படவிருந்தவை. குறிப்பாக, ஏர் இந்தியாவின் ஒரு […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் ‘உலக அகதிகள் தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. போர், மோதல் அல்லது துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நபர்களுக்காக, இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு என்றும், நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், […]
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்காமல் மாநாட்டின் பாதியிலேயே டிரம்ப் வெளியேறினார். மோடியை சந்திக்காத டிரம்ப், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கிறது என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் உடன் உணவு சாப்பிட நேரம் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான விருந்துக்கு […]
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் டிவி பங்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலாநிதிக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆம், சகோதரர் […]
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முடிவை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 19) அறிவித்தது. அதன்படி, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள தூதரகத்தின் இணையதளத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரானை தொடர்ந்து ஈரானை மத்திய அரசின் […]
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘SpaceX’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் வசதியில் அதன் பத்தாவது ராக்கெட்சோதனையின் போது, வெடித்துச் சிதறிய ‘ஸ்டார் ஷிப் 36’ ராக்கெட்டால் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வெடித்து சிதறிய போது, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், ஆனால் […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அதிமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கழக வளர்ச்சி பணிகள் குறித்து […]
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு தலைவர் கொமேனி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்கள் மற்றும் […]
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது. மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை […]