விளையாட்டு

நீதிமன்ம்அதிரடி !இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா மீது வழக்குப்பதிவு……!

ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய  உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு […]

#ADMK 2 Min Read
Default Image

ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகும் தோனி ரிவ்யு சிஸ்டம்(DRS)!தோனி ரிவ்யு ஓகே …..

டிஆர்எஸ்  ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை முதல் முறையாக அறிமுகமாகிறது. பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது.போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை, முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் […]

#Chennai 3 Min Read
Default Image

கேப்டவுனில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; வேகத்தில் மிரட்டும் ரபாடா மிரளும் ஆஸி., வீரர்கள்…!

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது […]

#Cricket 5 Min Read
Default Image

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே […]

#Test series 4 Min Read
Default Image

ஐபிஎல் 2018 : 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் வெளியீடு

11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர் சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன் ஜடேஜா – ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு – விக்கெட் […]

chennai super kings 5 Min Read
Default Image

இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் மீது வழக்குப்பதிவு?

நீதிமன்றம்  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா  மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இதனையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், […]

india 4 Min Read
Default Image

வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக் கோப்பை தகுதி சுற்றுகான போட்டியில் ஸ்காட்லாந்து அணிவுடன் நடந்த போட்டியில்  திரில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய […]

india 4 Min Read
Default Image

முகமது ஷமியின் மனைவி மேற்கு வங்க முதலமைச்சரை சந்திக்கிறார் !

வரும் 23ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்  சந்தித்து குறைகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் முகமது ஷமி மீது குடும்ப வன்முறை, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்து வரும் ஹசின் ஜஹான், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தமது பிரச்சனைகளை எடுத்துக்கூற நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஷமிக்கு எதிராக புகார்களை கூறியிருப்பதால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் […]

#Politics 2 Min Read
Default Image

புதிய தடை நீக்கம் வைத்த ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்!ராபாடா தடை நீக்கம் ….

ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்துக்குப் காகிசோ ரபாடா தன் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தடை நீக்கம் பெற்றது  பிடிக்கவில்லை. இனி பேட்ஸ்மெனை அனுமதிக்கக் கூடிய அளவுக்கு இடிக்கலாம் என்பது போல் மேல்முறையீட்டு முடிவு உள்ளது என்று சாடினார். 6 மணி நேர மாராத்தான் விசாரணையில் ஸ்மித் மீது ரபாடா இடித்தது லேசானதுதான் ஐசிசி வர்ணித்த அளவுக்கு அது மோசமாக இல்லை மேலும் வேண்டுமென்றெல்லாம் இடிக்கவில்லை என்று கூறி அவரது அபராதம், தகுதியிழப்புப் புள்ளியை குறைத்து தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் […]

india 6 Min Read
Default Image

சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் தோனி,மும்பை கேப்டன் ரோகித் ஒகே!மற்ற கேப்டன்கள் தேவை இல்லை…பிசிசிஐ அதிரடி ……

பிசிசிஐ , ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் துவக்க விழாவில் ரோஹித், தோனியை தவிர மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ள அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களாக விராட் கோலி, அஷ்வின், கவுதம் கம்பிர், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான 6ம் தேதி, ஸ்பெஷல் வீடியோ […]

#ADMK 4 Min Read
Default Image

முகமது ஷமியை நடு ரோட்டில் நிற்க வைத்து அடிக்க வேண்டும்?இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை ஷமி அழிக்கப்போகிறார்?

போலீசில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது இது குறித்து  ஹசின் ஜஹன் கூறியது ,அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது. அலிஸ்பா, முகமது ஷமியின் பெண் தோழியாக இருக்கலாம். அவர் விபசாரம் செய்பவராகவும் இருக்கமுடியும். வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணை ரகசியமாக சந்தித்து பேசிஉள்ளார், அறையை […]

india 4 Min Read
Default Image

தல தோனி செய்த செயலால் கிடைத்த பாராட்டும்?விமர்சனமும்?

ரசிகர்கள் பட்டாளம்  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அதிகம். அதேபோல், அவரும் தனது ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். இந்நிலையில், சமீபத்தில் தோனி தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக கட்டிடத்தின் விளிம்பில் நின்றது பரபரப்பை ஏற்படுட்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. சிலர் தோனியின் இந்த செயலை பாராட்டினாளும் சிலர் இவ்வாறு செய்வது ஆபத்தானது என விமர்சிக்கவும் செய்துள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#Chennai 2 Min Read
Default Image

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: நாளை தொடங்குகிறது

உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

#England 4 Min Read
Default Image

கலகத்தில் தினேஷ் கார்த்திக்?இவ்ளோ விளையாடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில விளையாட முடியலையே?

கோல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது முக்கியமல்ல என்று  தெரிவித்துள்ளார்.கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 […]

#Chennai 3 Min Read
Default Image

 ஐபிஎல் ட்ரெண்டிங்க் கணக்கை தொடக்கி வைத்த விராத் கோலி!ஹேர் ஸ்டைலை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள் …

ட்ரெண்டிங்க் என்றாலே ஐபிஎல் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். […]

#Chennai 3 Min Read
Default Image

முகமது சமி குறித்த ரகசிய தகவலை வெளியிட்டது பி.சி.சி.ஐ!

 பி.சி.சி.ஐ. இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக போலீசாரிடம்  தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை புகார்கள் மற்றும் அவரது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்திய அணியில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்த தகவல்களை பி.சி.சி.ஐயிடம் போலீசார் கோரியிருந்தனர். இதனிடையே ஹாசின் ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) […]

india 3 Min Read
Default Image

தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வு !

நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர்  அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவும் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார். ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் […]

#Chennai 7 Min Read
Default Image

டிராவிட்டின் டெல்லி அணியின் ஒப்பந்தத்தினால் 27 கோடி லாபம் பெரும் பிசிசிஐ

2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

27 crore 2 Min Read
Default Image

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் மிச்சேல் மேக்கிலெனகன்

ஐபில் போட்டியில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் மேக்கிலெனகன் இணைந்துள்ளார்.மும்பை அணியில் முன்னர் இருந்த ஜேசன் பெஹ்ரேன்டொரஃ உடல்நிலை காரணத்தினால் போட்டியில்இருந்து விலகுகிறார். இவருக்கு மாற்றாக மிட்செல்லை அணி தேர்தெடுத்துள்ளது. மேலும், இதை பற்றி பேசிய பிசிசிஐ, உடல்நிலை காரணமாக ஜேசன் ஐபில் போட்டிகளில் இருந்து விலகுகிறார். இதனால் தங்களது மாற்று வீரரை தேர்ந்தெடுக்க அணி முடிவுசெய்தது. மேலும், மிச்சேல்லை ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#mumbai 2 Min Read
Default Image

வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு?இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் ….

கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு  35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். வங்கதேச அணி, இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும்,போட்டியில் வென்று  […]

india 3 Min Read
Default Image