தமிழ்நாடு

திமுகவில் இணைந்த 4 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பாமக வேட்பாளர்..!

ஒசூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 4 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் 1 பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்தனர். இந்த நிலையில், நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]

#DMK 3 Min Read
Default Image

செங்கல்பட்டு பழைய பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து தொடக்கம் – தேசிய நெடுஞ்சாலை துறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை முதல் போக்குறதுக்காக திறக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறக்கப்படுகிறது. புதுப்பித்தல் பணியின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், பாலம் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. பாலாறு புதிய பாலத்தில் மட்டுமே வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு […]

தேசிய நெடுஞ்சாலைத்துறை 2 Min Read
Default Image

வரும் 27-ஆம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என்றும் பள்ளிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக ஜனவரி 23-ஆம் தேதி நடைப்பெறவிருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அறிவித்திருந்த […]

#TNGovt 2 Min Read
Default Image

மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்! – சீமான்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என சீமான் ட்வீட்.  ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் […]

#Seeman 5 Min Read
Default Image

#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.  இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் […]

#SupremeCourt 3 Min Read
Default Image

#BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு ..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்  குறித்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி  மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், […]

#Thoothukudi 3 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளூபடி செய்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த […]

#Jeyakumar 4 Min Read
Default Image

#BREAKING: “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவு. மன்னர் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “மரைன் எலைட்” படையை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் பாதுகாப்பை உறுதி செய்ய மரைன் எலைட் படையை உருவாக்க ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த “மரைன் […]

#TNGovt 2 Min Read
Default Image

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி! நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், இணைந்தே நல்லதோர் தமிழநாட்டை அமைப்போம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19 ஒரேகட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி பெரும் வெற்றியை ருசித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். […]

#CMMKStalin 13 Min Read
Default Image

நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ.நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு 2020-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறுகையில், “ஐ.நா. அமைப்புகளும், உலகில் உள்ள ஒவ்வொரு பொறுப்பான விஞ்ஞானிகளும் இப்போது […]

ஈஷா 7 Min Read
Default Image

அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? – கருணாஸ் பரபரப்பு அறிக்கை!

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என கருணாஸ் அறிக்கை. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற, அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில்,  அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அஇஅதிமு. சில […]

#AIADMK 5 Min Read
Default Image

கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள் என முதல்வர் ட்வீட்.  செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது  பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து,  […]

#MKStalin 3 Min Read
Default Image

மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் “கடற்பசு பாதுகாப்பகம்” – தமிழக அரசு அரசாணை!

அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அனுமதி. பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில் அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு […]

#TNGovt 4 Min Read
Default Image

3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை- கே.எஸ் அழகிரி..!

தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாநகராட்சி வார்டில் 22, நகராட்சி வார்டில் 56,  பேரூராட்சிவார்டில்  230  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பாஜக தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக […]

#BJP 3 Min Read
Default Image

“வெள்ளிக் கொலுசு,ஹாட் பாக்ஸ்,அண்டா என விலைப்பேசப்பட்ட வாக்காளர்கள்” – கமல்ஹாசன் பெருமிதம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப் புடவை, ரூ.2000 முதல் ரூ.8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் நேர்மைக்கு வாக்களித்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்.19  நடைபெற்றது.இதில் 12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி […]

#MNM 5 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் சில பிரிவுகள் சேர்ப்பு – காவல்துறை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தகவல். திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜெயக்குமார் மீது 66 (இ) தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் […]

#AIADMK 3 Min Read
Default Image

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு! – டிஎன்பிஎஸ்சி

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. .தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், TNPSC […]

#Examination 5 Min Read
Default Image

ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

188 புதிய ஆம்புலன்சுகளை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது  பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து,  நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இதனால், தமிழகத்தில் ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை […]

CMStalin 2 Min Read
Default Image

அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும்..!

சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, குடியரசுதின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் […]

குடியரசுதின அலங்கார ஊர்திகள் 4 Min Read
Default Image

தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு..!

இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான /மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் […]

#Rain 4 Min Read
Default Image